×

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது

நெய்வேலி, மார்ச் 26: நெய்வேலியில் மணல் கடத்த முயன்ற பொக்லைன், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.நெய்வேலி அருகே ஆதண்டார்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் விருதகிரி மகன் விக்னேஷ் (24). அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (21). இருவரும் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை கொண்டு சென்று நெய்வேலி அனல்மின் நிலையம் பின்புறம் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்த முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி தெர்மல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விக்னேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை