×

பழுதான மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

திண்டிவனம், மார்ச் 26:  திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு சந்தைமேடு பகுதியில் ராஜகோபால் நகர் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 4 மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஓரத்தில் உள்ள சேதமடைந்த மின்கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் வழியில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை