×

சிறைகளில் துப்புரவு பணி விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம், மார்ச் 26:  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறைகளில், துப்புரவு பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது தொடர்பாக கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய கிளை சிறைகளிலும், செஞ்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், 6 துப்புரவு பணிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட சிறையில் ஒரு சமையலர் பணியிடமும் காலியாக உள்ளன.துப்புரவு பணிக்கு கல்வித்தகுதி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமையலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கும் குறையாமல் அனுபவம் வேண்டும். இரு பணியிடங்களுக்கும் வயது வரம்பு 1.1.2019 அன்று 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னுரிமை பெற்றோருக்கு அரசாணை மற்றும் விதிகளின்படி செயல்படுத்தப்படும்.எனவே தகுதி வாய்ந்தவர்கள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கடலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் ரூ.22க்கான சுய முகவரியிட்ட உறையில் ஸ்டாம்ப் ஒட்டி வரும் 30ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : jails ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்