×

சாலையோர மரக்கன்றுகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சல்

ரிஷிவந்தியம், மார்ச் 26:  ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன் சங்கராபுரம் நெடுஞ்சாலைதுறை மூலம் நடப்பட்டது. இது அப்பகுதியில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக கோடையின் தாக்கம் அதிகமானதால் மரக்கன்றுகள் தாக்கு பிடிக்க முடியாமல் கருகியது. இதனால் சாலை பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி வந்தனர். ஆனால் போதிய நீர் கிடைக்காததால் மரக்கன்றுகளை பராமரிக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Water leakage ,
× RELATED பூண்டி நீர்த்தேக்க ஷட்டரில் ஓட்டை:தண்ணீர் கசிவதால் ஆபத்துக்கு வாய்ப்பு