×

பணம், பீடி கட்டுகள் பறிமுதல்

பண்ருட்டி, மார்ச் 26: நெய்வேலி தேர்தல் பறக்கும்படை அலுவலர் ஆறுமுகம் சிறப்பு உதவி ஆய்வாளர் கொளஞ்சி, தலைமையில் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை பண்ருட்டி சேலம் மெயின்ரோடு திருவாமூர் என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் கம்மியம்பேட்டை பிரபல துணிகடையை சேர்ந்த ஒருவரின் காரை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், எவ்வித ஆதாரமுமின்றி கார் டிரைவர் கணபதியிடம் ரூ.74,200 இருந்ததை பறிமுதல் செய்தனர்.இதேபோல் பண்ருட்டி முட்டை வியாபாரி பட்டாபி என்பவர் ஆத்தூர் நாமக்கல் பகுதியில் முட்டைகளை கொள்முதல் செய்வதற்காக மினிலாரியில் சென்றார். திருவாமூர் பாலம் அருகே ஆய்வு செய்தபோது எவ்வித ஆவணமின்றி ரூ.94,000 வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அதே இடத்தில் பைக்கில் பார்சல் பெட்டியுடன் வந்தவரை ஆய்வு செய்தபோது 55 பண்டல் கொண்ட கணேஷ் பீடி கட்டுகள் ஆவணமின்றி இருப்பதை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.13,750 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ1,81,950 ஆகும்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்