சேத்தியாத்தோப்பு, மார்ச் 26: சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ள குமாரக்குடியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல மாநாட்டு நடந்தது. கோட்டத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா, மதுசூதனன், இணை செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் பழனிவேல் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.கஜா புயலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வாரியம் அறிவித்த மும்மடங்கு சம்பளத்தை உடன் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 750 கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வை வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி வழங்கினார்.