×

ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண்

சென்னை, மார்ச் 26: பெரும்புதூர் அருகே பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 5 பேர், சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.பெரும்புதூர் அருகே படப்பை விவேகானந்தர் நகர் 12வது தெருவை ேசர்ந்தவர் பாஸ்கர் (எ) படப்பை பாஸ்கர் (38). பிரபல ரவுடி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு  முன் பாஸ்கர், படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.  மது வாங்கிக் கொண்டு வெளியே வந்த அவரை, 2 பைக்கில் வந்த 4 ேபர் மறித்து கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக தலை  மற்றும் உடல் முழுவதும் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த பாஸ்கர், அதே இடத்தில் இறந்தார். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில்  பாஸ்கரை கொலை செய்த வழக்கில், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை ேசர்ந்த அப்பு (38), வெங்கடேசன் (30), பெருங்குடி மணிமாறன் (29), ஆனந்தகுமார் (42), கொட்டிவாக்கம் சலீம் (29) ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் நேற்று  சரணடைந்தனர். அவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், நீதிமன்ற காவலில் உள்ள 5 பேரையும், போலீஸ் காவலில்  எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினர்.

Tags : Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...