×

புதுமண தம்பதியிடம் 22 சவரன் கொள்ளை

சென்னை, மார்ச் 26: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (29). இவரது மனைவி டில்லி ராணி (23). இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், ஆரணியில் உள்ள டில்லி ராணியின்  தாயார் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று காலை இருவரும் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர். அங்கு ஆரணி செல்லும் பஸ்சில் ஏறினர். இவர்களது பஸ் நெற்குன்றம் அருகே சென்றபோது, டில்லி ராணியின் கைப்பை  மாயமானது தெரிந்தது. அந்த பையில் 22 பவுன் நகை வைத்திருந்ததாக தெரிகிறது. இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பஸ்சில் ஏறும்போது மர்ம நபர்கள் பையை அபேஸ் செய்து இருக்கலாம், என்பதால், பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு பஸ் நிலையத்தில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. இரவு நேரத்தில் பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர். எனவே, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு  கண்காணிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...