×

புழல் சிறை கைதி சாவு

புழல்: சைதாப்பேட்டை விஜிபி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (47). இவர், திருட்டு வழக்கில் சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 19ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்று இரவே இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் உடனே சிறைத் துறையினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...