×

ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை ஆதம்பாக்கம், நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி நலச்சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவரிடம், ஆலந்தூர் பகுதியில் சென்னை மாநகராட்சி விதித்த அதிகபட்ச வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும். வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஆதம்பாக்கம்  ஏரியை தூர்வாரி பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நலச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

நான் எம்பி.யானதும் இவற்றை உடனடியாக நிறைவேற்றி தருவேன், என டி.ஆர்.பாலு உறுதி கூறினார். ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், நிர்வாகிகள் ப.முத்து,  கே.ஆர்.ஜெகதீஸ்வரன், எஸ்.ரத்தினம் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் சரவணன், ஜி.ரமேஷ் அகஸ்டின், தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆலந்தூர் 160வது வட்ட திமுக சார்பில், வட்ட செயலாளர்  கே.பி.முரளிகிருஷ்ணன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர்  பி.குணாளன் தலைமையில் பலர் வீடு வீடாக சென்று, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.பூபாலன், மாவட்ட இளைஞரணி  துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி  குணாளன் மற்றும் நிர்வாகிகள் ராஜவேல்,  பாபுகுமார், காங்கிரஸ் சார்பில்  கிருஷ்ணன், குகநாதன், மதிமுக சார்பில் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : TRB ,Nanganallur ,
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...