×

லாரி மீது பஸ் மோதல்

பல்லாவரம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை விழுப்புரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 20க்கும் மேற்பட்ட  பயணிகள் இருந்தனர். பேருந்தை தமிழ்மணி (44) என்ற டிரைவர் இயக்கினார். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் திருநீர்மலை அருகே பஸ் வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அரசுப் பஸ் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி  நொருங்கியது. பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட டிரைவர் தமிழ்மணி படுகாயமடைந்தார்.

பயணிகள் சிலரும் படுகாயமடைந்து அலறி துடித்தனர். படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் தமிழ்மணி உள்ளிட்ட காயமடைந்த பயணிகளை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படக் காரணமாக இருந்த லாரி டிரைவர் சிவகுமார் (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bus clash ,
× RELATED 2 பள்ளி வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதல்: 20 பேர் காயம்