×

தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 22: திருவில்லிபுத்தூரில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்.18ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருவில்லிபுத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவில்லிபுத்தூர் காவல் நிலைய உட்கோட்ட அளவில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, உதவி தேர்தல் அதிகாரி செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். காவல்நிலைய உட்கோட்ட அளவில் நடந்த கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் நகர் தாலுகா மம்சாபுரம் மல்லி கிருஷ்ணன் கோயில், வத்திராயிருப்பு நத்தம்பட்டி, வன்னியம்பட்டி ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது, காவலர்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி, துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Election consultation meeting ,
× RELATED முறைப்படி அழைப்பு வராததால் தேர்தல்...