×

நாற்றம் தாங்க முடியவில்லை பணி நியமன ஆணை வழங்கும் விழா

சிவகாசி, மார்ச் 22: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வில் வெற்றி பெற்ற பல்வேறு துறைகளை சேர்ந்த  மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. முதல்வர் நந்தகுமார் வரவேற்று பேசினார். நிர்வாக குழு உறுப்பினர் கணேஸ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் முரளிதரன் பணி நியமன ஆணையை வழங்கினார்.
கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சிவராமன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி  அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அச்சுதுறை பேராசிரியர் புகழ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது