×

போடி அருகே வீடு புகுந்து திருடியவர் கைது

போடி, மார்ச் 22: போடி அருகே வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் வீரமணி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவரின் மனைவி அழகுமணி(39) தனியே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வீட்டின் முன் கதவை திறந்து வைத்துவிட்டு பின் பக்கம் துணி துவைத்து கொண்டிந்தார். அப்போது ஒருநபர் வீட்டிற்குள் புகுந்து செல்போன், ஆயிரம் ரூபாயை திருடிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்ட அழகுமணி, இதைப்பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடனை பிடித்து போடி புறநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் போடி தர்மத்துப்பட்டியை சேர்ந்த சேகர்(44) என்று ெதரிய வந்தது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தமபாளையம் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags : robber ,house ,Bodi ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்