சாயல்குடி, மார்ச் 22: கடலாடி அருகே காவாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 65 வருட ஆண்டு விழா நடந்தது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் காவாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியின் 65 வருட ஆண்டு விழா முதுகுளத்தூர் டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையிலும், துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன், பெற்றோர் கழக தலைவர் சீனிவாசன் முன்னிலையிலும் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரக்கண்ணு வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவர்களின் கையெழுத்து மலர் நூலை கிராம நிர்வாகி முத்துகிருஷ்ணன் வெளியிட்டார். ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் குழு விளையாட்டு, தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர் செந்தூர்பாண்டியன், ஆசிரியர்கள் சுவாதிமுத்து, கிருபா, ஆனந்தி, அமுதராணி, அன்னசியோட்டா, காளிதாஸ் மற்றும் பெற்றோர், கிராம மக்கள், இதர பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.