×

பங்குனி உத்திர திருவிழா


தொண்டி, மார்ச் 22: தொண்டி வட்டாணம் கிழக்கு கடற்கரை சாலையில் போலீக் ஸ்டேஷன் அருகே உள்ள பொன் வழிவிடு வினாயகர் கோயில் பாலுமுருகன் 22ம் ஆண்டு பங்குனி உத்தர திருவிழா நடைபெற்றது.
பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு நேற்று வினாயகர் கோயிலில் உள்ள முருகனுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தனம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜையும் தீப ஆராதனையும் நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது. சுற்றுவட்டாரத்திலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Marai Uthiram Festival ,
× RELATED பங்குனி உத்திர திருவிழா : காவடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்