×

கால் டாக்சி டிரைவர்கள் ஸ்டிரைக்

அவனியாபுரம், மார்ச் 22: கூடுதல் கமிஷன் வழங்க கோரி, மதுரை விமான நிலையத்தில் கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் 3வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலைய வளாகத்தில், பயணிகளை ஏற்றி செல்லும் பணியில் தனியார் கால் டாக்சி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான டிரைவர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் கூடுதல் கமிஷன் வழங்க கோரியும், விமான நிலையத்தில் பைக் டாக்சிகளை அறிமுகம் செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கினர். 3வது நாளான இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால் விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


Tags : taxi drivers ,
× RELATED பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து...