×

மணல் லாரி பறிமுதல்

மேலூர், மார்ச் 22: உரிய ஆவணங்கள் இல்லாமல் நான்குவழிச்சாலையில் வந்த மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். கொட்டாம்பட்டி போலீசார் நான்குவழிச்சாலை காடம்பட்டி விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து மதுரைக்கு மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி வந்த அந்த மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் கம்பூர் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டி(41)யை கைது செய்தனர்.

Tags : Sandy ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்