×

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி 6 பேர் படுகாயம்

திருமங்கலம், மார்ச் 22: திருமங்கலம் அருகே குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது கார் லாரி மீது ேமாதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். காரைக்குடி அருகேயுள்ள போகினூரினை சேர்ந்தவர் சரவணன்(42). தச்சுவேலை செய்து வருகிறார். மனைவி கண்மணி(38). நேற்று முன்தினம் உறவினர்களுடன் சேர்ந்து நெல்லை மாவட்டம் களக்காட்டிலுள்ள குலதெய்வ கோயிலுக்கு காரில் சென்றனர். நேற்று அதிகாலை 1 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் சமத்துவபுரத்தின் எதிரே நான்குவழிச்சாலையில் கார் சென்ற போது முன்னாள் துாத்துக்குடிக்கு சிமெண்ட் லோடு ஏற்ற சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சரவணன், கார் டிரைவர் வள்ளியப்பன், உறவினர்கள் செந்தில்குமார் அவரது மனைவி ஸ்வர்ணலதா, காளியம்மாள், சேகர் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் கண்மணியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car accident ,
× RELATED கார் விபத்தில் வாலிபர் படுகாயம்