×

சுயேட்சை மனு தாக்கல்

மதுரை, மார்ச் 22: மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மாகாளிபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ்(47). தேர்தல் அலுவலர் கலெக்டரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ் பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள இவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவும், மக்களுக்கு கிடைக்க கூடிய பல்வேறு சலுகைகளை கிடைக்க பொதுநல வழக்குகளை தொடுத்தவர். இவர் மீது கடந்த 2003ல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டு அதில் விடுதலை பெற்றார். சமூக ஆர்வலரான இவர் மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறரர். மதுரை மக்களவைத் தொகுதியில் இவரையும் சேர்த்து இதுவரை 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Independent ,
× RELATED ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டிய...