×

தேர்தல் விதிமுறைகள் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

சோழவந்தான், மார்ச் 22: சோழவந்தானில் தேர்தல் விதிமுறைகள் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு வாடிப்பட்டி தாசில்தார் இளமுருகன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.கீதா முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு வரவேற்றார். இதையடுத்து ஜெனகை மாரியம்மன் கோயிலில் இருந்து துவங்கிய விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை பயிற்சி கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் பஸ்நிலையத்தில் அனைத்து துறையினர் பங்கேற்ற மனித சங்கிலி நடைபெற்று. அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், துணை வட்டாட்சியர் வனிதா மற்றும் கோமதி,  வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேசன், அழகுக்குமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், சிவக்குமார் மற்றும் சோழவந்தான், தென்கரை பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு