குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்

கொடைக்கானல், மார்ச் 21: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி சார்பில் பங்குனி உத்திர காவடி ஊர்வலம் நடந்தது. நாயுடுபுரம் கோயில் அருகிலிருந்து துவங்கிய காவடி ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக குறிஞ்சி ஆண்டவர் கோயில் சென்றடைந்தது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் காவடி ஏந்தியும், அலகு குத்தியும் சென்றனர். தொடர்ந்து குறிஞ்சி ஆண்டவர் கோயில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள், பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். நகராட்சி சார்பில் மோர் பந்தல்: கொடைக்கானலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஆணையாளர் முருகேசன் துவக்கி வைத்து பக்தர்களுக்கு தண்ணீர், குளிர்பானம், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு இவை வழங்கப்பட்டது.

Related Stories: