திண்டுக்கல், மார்ச் 22: சின்னாளபட்டியை சேர்ந்தவர் கிருபாகரன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் அரசு சொத்துக்களை சேதம் விளைவிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதத்தில் ஈடுபடுவார் என கருதி சின்னாளபட்டி போலீசார் கிருபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.