அரசு பள்ளி ஆண்டு விழா

வத்தலக்குண்டு, மார்ச் 22: வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம் தலைமை வகிக்க, அங்கயற் கண்ணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கனிமொழி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சிங்கராசு ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிய மன்ற மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாய செல்வி, ஆசிரியர் பயிற்றுநர் பாலதண்டபாணி, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் செல்வராணி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் மாரியம்மாள் மஞ்சுளா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: