×

ஏம்பலம் கோயிலில் காவடி உற்சவ விழா

நெட்டப்பாக்கம், மார்ச் 22: நெட்டப்பாக்கம் அடுத்த  ஏம்பலம் பாலமுருகன் கோயிலில் 12ம் ஆண்டு காவடி உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக பாலவிநாயகர் மூர்த்திகள், ஆதிபராசக்தி, பாலமுருகன் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பால்சாகை வார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான காவடி வீதியுலா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வமுடன் காவடி ஏந்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Tags : Kavadi Festival ,
× RELATED வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் கோயில்...