×

மயிலம் முருகர் கோயிலில் விழிப்புணர்வு பிரசாரம்

மயிலம், மார்ச் 22: மயிலம் சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. அப்போது எதிர்வரும் மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 100 சதவீத வாக்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடும்போது எதற்கு வாக்கு அளித்தோம் என தெரியும் வகையில் இயந்திரம் வைத்துள்ளதை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த மாணவிகளின் கலை நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தாசில்தார் ரகோத்தமன், டிஎஸ்பி கனகேஸ்வரி, ஆர்ஐ அக்தர்ஜகான், விஏஓ கலைச்செல்வன் உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayilam Murugan ,
× RELATED மயிலம் முருகன் கோயிலில் 2 ஆயிரம் தொண்டர்கள் முடி காணிக்கை