×

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

திருக்கோவிலூர், மார்ச் 22:  திருக்கோவிலூர் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு(63). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காசிநாதன் குடும்பத்திற்கும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிக்கண்ணு தனது சகோதரர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காசிநாதன் குடும்பத்தினர் சாமிக்கண்ணுவையும், அவரது உறவினர்களையும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சாமிக்கண்ணு, அவரது உறவினர் மணிகண்டன் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சாமிக்கண்ணு, திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காசிநாதன் மகன்கள் மணிகண்டன்(27), அழகேசன்(26), மனோகர்(36). ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் அழகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : elder ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3