×

வீரட்டானேஸ்வரர் கோயிலில் கிரிவலம், ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி, மார்ச் 22: பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோயிலில், பவுர்ணமியையொட்டி கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மாடவீதியை சுற்றி கிரிவலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 16 முறை மாடவீதியை கிரிவலம் வந்தனர். அன்றிரவு 7.30 மணியளவில் அம்பாள் பெரியநாயகி 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனை தொடர்ந்து இரவு 11 மணியளவில் அர்த்த ஜாம பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Swayambhu Utsavam ,Veeranthaneswarar temple ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்