×

சாலை விபத்தில் வாலிபர் சாவு

குறிஞ்சிப்பாடி, மார்ச் 22: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வாணதிராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன்(28). இவர் வடலூர், கணபதி நகரில் வசிக்கும் நண்பர் கார்த்திகேயன்(30) என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினர். அன்பழகன் பைக் ஓட்ட கார்த்திகேயன் பின்னால் அமர்ந்து வந்தார்.

கடலூர்- விருத்தாசலம் பிரதான சாலை பெத்தநாயக்கன்குப்பம் பீங்கான் தொழிற்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கார்த்திகேயன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,road accident ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...