×

பாம்பன் சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிதம்பரம், மார்ச் 22: சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. காலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காவடிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி புறப்பாடு நடந்தது. காலை 11 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் சாமி வீதியுலா நடந்தது. இரவு 8 மணியளவில் கோயிலில் 1008 குமாரஸ்தவ சிறப்பு அர்ச்சனை மற்றும் பங்குனி உத்திர மகாதீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை பாம்பன் சுவாமிகள் மடாலய டிரஸ்டி பசுபதி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Thirukkalai ,festival ,Pamban Swamy ,
× RELATED பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை