×

மனைவி, மாமியாரை அரிவாளால் தாக்கிய கூலி தொழிலாளி கைது

ஆலங்குளம், மார்ச் 22:  சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலமுருகன் (25). கூலி தொழிலாளியான இவருக்கும், ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தை சேர்ந்த முப்பிடாதி மகள் ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிைலயில் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஈஸ்வரி தாயார் காளியம்மாள், நேற்று மகளை பூலாங்குளத்திற்கு அழைத்து வந்தார். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பாலமுருகன், மனைவி வீட்டில் இல்லாததால் அவரை தேடி பூலாங்குளம் சென்றுள்ளார். அங்கிருந்த ஈஸ்வரியை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அப்போது மாமியாருக்கும், மருமகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த அரிவாளை மாற்றி பிடித்து காளியம்மாள் மற்றும் ஈஸ்வரியை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த இருவரையும், அருகிலிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

Tags : wage laborer ,
× RELATED கூலி தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை : நீதிமன்றம் உத்தரவு