மண்ணச்சநல்லூர், மார்ச் 22: திருவெள்ளரை புண்டரீகாட்ஷப் பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாக கூறி அடைக்கப்பட்டிருந்த வடக்குவாசல் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயில்களில் ஒன்று திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த கோயிலின் வடக்கு வாசலில் உள்ள ராஜகோபுரம் முற்றுப்பெறாமல் உள்ளதால் ராஜகோபுரத்தை கட்டுவதற்கு அறநிலையத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 24.2.2017 அன்று முதல் ராஜகோபுர பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. பணிகள் நடைபெறுவதை காரணம் கூறி வடக்குவாசல் அடைக்கப்பட்டது.