×

அரியமங்கலம் உக்கடை மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழா

திருச்சி, மார்ச் 22:  திருச்சி அரியமங்கலம்  உக்கடை பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை தடுக்கவும்,  சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. திருச்சி அரியமங்கலம் உக்கடை மாநகராட்சி பள்ளிக்கு ஊர்மக்கள் சார்பில் பீரோ, டேபிள், சேர்,நோட்டு, புத்தகம், டிக்ஸ்னரி,பேனா, பென்சில், சில்வர்குடம், தட்டு, வாளி,  துப்பரவு உபகரணங்கள், உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தலைமை ஆசிரியர் ஜெரால்டு மஞ்சுளா, ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை   ஊர்வலமாக எடுத்து  வந்தனர். அதன் பின்னர் சீர் கொண்டு வந்த பொதுமக்களை,  ஆசிரியர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் கொண்டு வந்த கல்வி சீர்பொருட்களை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Ariyamangalam UCADA Municipal Corporation ,school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி