தேர்தல் விதிமீறி ஊர்வலம் 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, மார்ச் 22: திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சிக்கொடியுடன் ஊர்வலமாக சென்ற எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதில் சுவர் விளம்பரம், அனுமதி இன்றி ஊர்வலம், ஊர்வலத்தில் கட்சி கொடி கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்  ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கன் டோன்மென் பகுதியில் தேர்தல்  பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைக்க டி டிவி வந்தார். அப்போது கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியினர் கட்சி  கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து தேர்தல் விதிமீறல் என 5 பேர் மீது கன்டோன் மென்ட் போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: