மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ.4.77 லட்சம் மதிப்பு தங்கசெயின்கள் பறிமுதல்

திருச்சி, மார்ச் 22: திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணி ஒருவர் உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூ. 4,77,000 மதிப்புள்ள தங்க செயின்களை சுங்க அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சையது ஹமீது என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர். அவர் 150 கிராம்  மதிப்புள்ள தங்க செயினை உடைமையில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் ஆகும். அவரிடம் இருந்து தங்க செயினை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: