விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட விவசாய சங்க நிர்வாகி வேட்பு மனு தாக்கல்

விளாத்திகுளம், மார்ச் 22: விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட உணவு பொருட்கள் வழங்கல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரனிடம்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மாற்று வேட்பாளராக தமிழ் விவசாயிகள் சங்க இளைஞரணி அமைப்பாளர் சுந்தர்ராஜ் மனு தாக்கல் செய்தார். கோவில்பட்டி முடுக்கலான்குளத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர், 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். பல்வேறு விவசாய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். தற்போது தமிழ் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார்.

Related Stories: