மண்ணச்சநல்லூர், மார்ச் 22: மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் மாணவி காதலை ஏற்காததால் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் மகள் வினோதினி (20). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரில் உள்ள காவல்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு மகன் மணீஷ் (25). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில் வேலை இல்லாத மணீஷ் கல்லூரி மாணவியின் அழகில் மயங்கி ஒரு தலையாக காதலித்து வந்தார். தனது காதலை வினோதினியிடம் தெரிவித்தார். ஆனால் வினோதினி காதலை ஏற்கவில்லை. பலமுறை காதலை சொல்லியும் வினோதினி மணீசின் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்தார்.