கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி, மார்ச் 22: கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 35வது விளையாட்டு விழா நடந்தது. கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 35வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவியருக்கான ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வாலிபால் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அமைப்பியல் துறை விரிவுரையாளர் காசிராஜன் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு துறை இயக்குநர் சிவராஜ் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணப்பன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மகேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை இயக்குநர் அருணாசலம் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் ரஜேஸ்வரன், உடற்கல்வி இயக்குநர் சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: