குளத்தில் தண்ணீர் குடித்த 4 மாடு சாவு

செய்துங்கநல்லூர், மார்ச் 22: வல்லநாடு அருகே சீத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன், உத்திரன். இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இதே பகுதியில் உள்ள குளத்தினருகே மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தனர். இந்நிலையில், குளத்தில் தண்ணீர் குடித்த 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. தகவலறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர்களும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த மாடுகள் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories: