திமுக வேட்பாளர் கனிமொழி 25ம் தேதி வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, வருகிற 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தூத்துக்குடி மக்களின் பேராதரவோடு போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, வருகிற 25ம் தேதி (திங்கள் கிழமை) காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி, வட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கையில் கொடிகளுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Related Stories: