×

தாய் விஷம் கொடுத்த 2 வயது குழந்தை பலி

சேலம், மார்ச் 22: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கோமதி(28). இவர்களது குழந்தைகள் மகாலட்சுமி(3), கவுசிகா ஸ்ரீ(2). கோமதி கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்துள்ளார். இதனையடுத்து, சந்திரசேகர் மனைவி மற்றும் குழந்தைகளை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை கோமதி மற்றும் குழந்தைகள் மயங்கி இருந்தது கண்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதில் மூவரும் குருணை மருந்தை குடித்தது தெரியவந்தது. இவர்களில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் குழந்ைத கவுசிகாஸ்ரீக்கு (2)  மூளைச்சாவு ஏற்பட்டது. இந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை