×

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு வலை

மேச்சேரி, மார்ச் 22: மேச்சேரி அருகே புதுகாளிகவுண்டனூர் பகுதியை சேர்ந்த விவசாயி தினேஷ்குமார்(25). இவர் நேற்று மாலை, தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், அவரை வழிமறித்து குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அப்போது, தன்னிடம் இருந்த ₹1100 பணத்தை, தினேஷ்குமார் கொடுத்துள்ளார். ஆனால், இன்னும் பணம் கேட்டு கழுத்தில் கத்தியை வைத்து மர்ம நபர்கள் மிரட்டினர். இதனால், தினேஷ்குமார் சத்தம் போட்டதை கேட்டு, அருகில் இருந்த பொதுமக்கள் வந்தனர்.  அப்போது, மர்ம நபர்களில் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து பொதுமக்களை காட்டி மிரட்டினார். இதை பார்த்து அச்சமடைந்த மக்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் ேபரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்