வீட்டு பூட்டை உடைத்து ₹1 லட்சம் கொள்ளை

சேலம், மார்ச் 22: சேலம் சூரமங்கலம் பக்கமுள்ள ரெட்டிப்பட்டி மோட்டூரைச்சேர்ந்தவர் பாஸ்கரன்(65). பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 15ம்தேதி குடும்பத்துடன் ஸ்ரீரடிக்கு சென்றிருந்தார். நேற்று காலை சேலம் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ₹1 லட்சம், 5 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: