ேசலம், மார்ச் 22: சேலம் அன்னதானப்பட்டியில் பிரபல ரவடிகளான கோழி பாஸ்கர் மற்றும் பெருமாள் ஆகிய 2 தரப்பினரிடையே, அடிக்கடி கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு நடந்த தகராறின் போது, கோழி பாஸ்கரின் அண்ணன் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகியோரை பெருமாள் தரப்பினர் கொலை செய்தனர். இதில், ஒரு கொலை வழக்கு அன்னதானப்பட்டியிலும், மற்றொரு கொலை வழக்கு கிச்சிப்பாளையத்திலும் நடந்து வந்தது. பழனி கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடிகளான துரைசாமி, அருள்முருகன் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற அப்பீலிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, அருள் முருகன் உள்பட 8 பேர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.