வேட்பாளர் வருகைக்காக 4மணி ேநரம் காத்திருப்பு

ஆத்தூர், மார்ச் 22: ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை, நேற்று காலை 11 மணியவில், அதிமுக நகர அலுவலகத்தில் சந்திப்பதாக கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று, கூட்டணியை சேர்ந்த பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், அதிமுக அலுவலகத்தில் காலை 10 மணி முதலே வர தொடங்கினர். ஆனால், வேட்பாளர் சுதீஷ் மதியம் 2.30 மணியளவில் தான் வந்தார். அதன் பின்னர், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். ஏறத்தாழ 4 மணி நேரத்திற்கு மேல் கட்சி நிர்வாகிகளை காக்க வைத்த தேமுதிக வேட்பாளர் சுதீஷின் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதனை எல்லாம் சுதீஷ் கண்டுகொள்ளவே இல்லை. அவருடன் தேமுதிக மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் சோலை.சந்திரன், ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் வந்திருந்தனர்.

Related Stories: