திருத்துறைப்பூண்டி, மார்ச் 22: திருச்சி ஜோசப் கல்லூரியில் மண்டல அளவிலான கையெழுத்து திறன் போட்டி நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி புனிதா தெரசா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டியில் ஆகர்சன் முதலாம் வகுப்பு, மோகனப்ரியா 5ம் வகுப்பு, விஷ்ணுப்ரியா 8ம் வகுப்பு மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். இவர்களை பள்ளி நிர்வர்கிகள் தலைமையாசிரியை இசபெல்லா ராணி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பாரட்டினர்.