×

தேர்தல் முடியும் வரை மகளிர் சுயஉதவி குழுவுக்கு கடன் வழங்கக்கூடாது தனியார் நிதி நிறுவனத்திற்கு பறக்கும் படை எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 22:  திருத்துறைப்பூண்டி அருகே மகளிர் சுயஉதவி குழுவுக்கு தேர்தல் முடியும் வரை கடன் வழங்க கூடாது என பறக்கும் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் தனியார் நிதி  நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேர்தல் நடத்தை  விதிமுறைகளை மீறி கடன் வழங்குவதாக தகவலறிந்த தாசில்தார் ராஜன்பாபு,  தேர்தல்  பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சப்.இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், ஏட்டு ராஜாக்கண்ணு மற்றும் போலீசார்  மடப்புரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றனர்.

அங்கு  அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் அலுவலகத்தினர் திரண்டு நின்று  மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து பறக்கும் படை அலுவலர்கள் நிதி நிறுவன அலுவலர்களிடம்  பேசி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மகளிர் சுய உதவிக்  குழுவினருக்கு கடன் வழங்ககூடாது. தேர்தல் முடிந்த பின் கடன் வழங்க தடை இல்லை.  மீறினால் நிதி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரித்து சென்றனர்.

Tags : fighter ,institution ,women ,self-help group ,election ,
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து