×

வாக்குச்சாவடிகளில் தீயணைக்கும் கருவிகள் பொருத்த கோரிக்கை

நாமக்கல், மார்ச் 22: கோடை காலம் என்பதாலும், வாக்குசாவடி மையங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், அதை அணைக்கு விதமாக தீ அணைப்பு கருவிகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக குடிநீர், கழிவறை, மின்சாரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், தேர்தல் ஆணையம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இதேபோல், மக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், தற்போது கோடை காலம் என்பதாலும், வாக்குசாவடி மையங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், அதை அணைக்கு விதமாக தீ அணைப்பு கருவிகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...