×

பங்குனி உத்திர திருவிழா

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 22: திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் தீமிதித்து வழிபாடு நடத்தினர். பங்குனி உத்திரத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத  அக்னீஸ்வரர், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பக்தர்கள், பால் குடம் எடுத்து வீதியுலாவாக வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Marai Uthiram Festival ,
× RELATED பங்குனி உத்திர திருவிழா : காவடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்