பட்டுக்கோட்டை, மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆர்டிஓ பூங்கோதை தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.